| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
கடந்த 13 வருடங்களாக தமிழகம் முழுவதும் சமூக நலப் பணிகளை அல்லாஹ்வின் உதவியோடு நாம் செய்து வருகின்றோம். 1996 ஆம் ஆண்டு விடியல் வாசர் வட்டம் எனத் தொடங்கிய நமது பணிகள் 2001-ஆம் ஆண்டு முதல் முறைப்படுத்தப்பட்டு மனித நீதிப் பாசறை (MNP) என்ற பெயரில் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன (அல்ஹம்துலில்லாஹ்).
நம்மைப்போன்ற
தென்னிந்தியாவில் சமூக
மாற்றத்தின் முன்னோடியாக
விளங்கிக் கொண்டிருக்கும்
மக்கள் இயக்கங்களான நேஷனல்
டெவலப்மென்ட் ஃப்ரண்ட் (NDF)
கேரளா, கர்நாடகா ஃபாரம்
ஃபார் டிக்னிடி (KFD)
– கர்நாடகா ஆகியவற்றோடு நாமும்
இணைந்து பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா என்ற கூட்டமைப்பை
கடந்த டிசம்பர்
2006-ல் பெங்களூரில்
உதயமாக்கினோம்.
அகில இந்திய அளவில் அனைத்துத்
தரப்பு மக்களும் சுதந்திரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றை
முழுமையாக பெற்றுத்
தருவதற்காகவும் முஸ்லிம்களை
சக்தி படுத்துவதன் மூலம்
வலிமையான இந்தியாவை
உருவாக்குவதற்காகவும்
செயல்படும் பேரியக்கமே
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா.
இந்நிலையில் கடந்த டிசம்பர்
2008 ல் கூடிய
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின் தேசிய பொதுக்
குழுவில்
3
மாநில இயக்கங்களும் ஒரே
இயக்கமாக செயல்படுவோம் என்று
தீர்மாணிக்கப்பட்டு இன்று
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா என்ற ஒற்றை இயக்கமாக
செயல்பட்டு வருகின்றோம்.
தேசிய அரசியல் தளத்தில்
முஸ்லிம்களை சக்தி படுத்தும்
நோக்கில் கடந்த பிப்ரவரி
13, 14, 15 கேரளா
மாநிலம் கோழிக்கோட்டில் நாம்
நடத்திய தேசிய அரசியல் மாநாடு
இந்திய முஸ்லிம்களின் அரசியல்
புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அத்தோடு மாநாட்டில் முக்கிய
அறிவிப்பாக தமிழ்நாடு,
கேரளா,
கர்நாடகா ஆகிய மாநிலங்களோடு,
ஆந்திரா,
மணிப்பூர்,
மேற்கு
வங்காளம்,
ராஜஸ்தான், கோவா ஆகிய ஐந்து
மாநிலங்களில்; பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா செயல்பட்டு
வருகிறது.
|
|
|
|
| POPULAR FRONT OF INDIA |