இலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம் - நூற்றுக்கணக்கானவர்கள் கைது! 23-ஏப்ரல்-2012

இலங்கை தம்புள்ளையில் அமைந்துள்ள மஸ்ஜிதே ஹைரிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் புத்த பிட்சுகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த‌ இனவெறி தாக்குதலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சுமார் 500க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் பள்ளிவாசலை நோக்கி பேரணியாக வந்து, பின்னர் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கண்டன உரை நிகழ்த்தும் மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம்

ம்பவ இடத்தில் நின்றிருந்த காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் புத்த பிட்சுகளை தாக்குதல் நடத்த விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த இனவெறி தாக்குதலால் வழக்கமாக வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ஜும்மா பிரசங்கமும், தொழுகையும் நடைபெறவில்லை. அதற்கான தயாரிப்பில் முஸ்லிம்கள் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


காட்டு மிராண்டித்தனமாக முஸ்லிம்களின் இறையில்லத்தின் மீது தாக்குதல் நடத்திய இனவெறி பிடித்த புத்த பிட்சுகளை கண்டிக்கும் வகையில் சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முன்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் ஏப்ரல் 23 மாலை 4மணியளவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.


இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் சென்னை மாவட்ட தலைவர் ஜே. முஹம்மது நாஜிம் கலந்து கொண்டு கண்டன உரைநிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


...
நெல்லை முஸ்லிம்களின் இடஒதுக்கீடுக்காக பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 23-ஏப்ரல்-2012

மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்த நெல்லை ... இனிமேலாவது செவி சாய்க்குமா மத்திய மாநில அரசுகள்

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பதாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் வழங்கிய அவர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் 7% ஆக உயர்த்தக்கோரியும், தேசிய அளவில் நீதிபஹி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் 10% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த நான்கு மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரம், துண்டு பிரசுரங்கள் மூலம் பிரச்சாரம், வாகனப் பேரணி, கருத்தரங்கங்கள், கலந்தாய்வுக் கூட்டங்கள், கண்காட்சிகள், ஆகியவற்றின் வாயிலாக தமிழகத்தில் தொடர் பிரச்சாரத்தை நடத்தி வந்தது.

இந்த முஸ்லிம் இடஒதுக்கீட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 22 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாசென்னை, தஞ்சை, கோவை, மதுரை, மற்றும் நெல்லை ஆகிய நகரங்களில் மாபெரும் கோரிக்கை பேரணி மற்றும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் மாநில செயலாளர் பைசல் அஹ்மத் தலைமையில்  துவங்கிய பேரணிலூர்துனாதர் சில வழியாக தெற்கு பஜார்,மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ,மிலிடரி லைன் , காவல் துறை கட்டுப்பாட்டு அறை வழியாக பாளை ஜவகர் திடலை சென்று அடைந்தது அங்கு நாகர்கோவில் கலாசார பள்ளியின்  தலைமை இமாம் சவுக்கத் அலி    முன்னிலை வகித்து உரை ஆற்றினார்கள் 


பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணை தலைவரும் ,விடியல் வெள்ளி பத்திரிக்கை ஆசிரியரும் முஹம்மத் இஸ்மாயில் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் மாநில செயலாளர் கே.செய்யது இப்ராகிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் 

ஆர்பாட்டத்தில்  நிறைவேற்றபட்ட தீர்மானகளை பாப்புலர் ஃப்ரண்ட் நாகர்கோவில் மாவட்ட தலைவர் ஜுல்பிகர் அலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் முஹம்மத் ஹாலித் படித்தனர்,இறுதியில் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் அவர்கள்  நன்றியுரை ஆற்றினார்கள்.இறுதியாக நெல்லை மாவட்ட ஆட்சி தலைவரிடம் இட ஒதுக்கீட்டு கோரிக்கை வலியுறுத்தி நெல்லை மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன்,மாவட்ட செயலாளர் ஹைதர் அலி ,நெல்லை மாநகர தலைவர் மூஸல் ஹாலிம்,மேற்கு மாவட்ட  தலைவர்   லுக்மான்,பேட்டை நகர தலைவர் சாகுல் ஹமீத் ஆகியோர் மனு கொடுத்தனர் ,இந்த ஆர்பாட்டத்தில் 5000 க்கும் மேற்பட்ட  மக்கள் கலந்து கொண்டனர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களி நிறைவேற்றப்பட்டன‌

1. முஸ்லிம்கள் மிகவும் பிந்தங்கிய நிலையில் இருந்ததால் தான் சுதந்திரம் பெறும் முன்பேஅவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்பும் நமது நாட்டின் மக்கள் தொகையில் (2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 13.4% முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். சுதந்திரம் பெற்ற பின் முஸ்லிம் சமூகத்தின் நிலை மேலும் மோசமானதே தவிர எந்தவொரு முன்னேற்றமும் அடையவில்லை. இந்நிலையில் மத்திய அரசு சுதந்திரம் பெற்ற பின் முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டை ஒரேடியாக ரத்து செய்தது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே சமூக நீதியின் அடிப்படையில் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்தினை முன்னேற்ற முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10% தனி இடஒதுக்கீட்டை மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுப் பணிகளில் உடனடியாக அமுல்படுத்திட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.

2. வகுப்புரிமை ஆணையின் மூலம் 1948ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் 7% தனி இடஒதுக்கீடு வழங்க்கப்பட்டிருந்தது. வகுப்புரிமை ஆணையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்த போது தான் முஸ்லிம்களுக்கு தனியாக 7% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 1948ம் ஆண்டு வகுப்புரிமை ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் இடஒதுக்கீடு வழங்கிய போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடவில்லை. மாறாக பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டனர். சச்சார் கமிஷனின் ஆய்வுப்படி இடஒதுக்கீடு, சலுகை கிடைக்கப்பெறாத முன்னேறிய முஸ்லிம்களின் நிலை, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடஒதுக்கீடு அனுபவித்து வரும் ஹிந்து சமூகத்தினரைவிட மோசமானதாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளார். எனவே முஸ்லிம்களால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுடன் போட்டி போட இயலாது. 2007ம் ஆண்டில் தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் இந்த 3.5% இடஒதுக்கீடு முஸ்லிம் சமூகத்தை, முன்னேற்றிட நிச்சயமாக போதுமானது கிடையாது. பிற சமூகங்களுக்கு விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கிய போது 5.6% மக்கட்தொகையுடைய முஸ்லிம்களுக்கு வெறுமனே 3.5% இடஒதுக்கீடு வழங்கியது பாரபட்சமாகும். எனவே சமூக நீதியின் அடைப்படையிலும் சம நீதியின் அடிப்படையிலும் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட அதே 7% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கும் வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கும் வகையில் தமிழகத்தில் தற்போதுள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% உயர்த்தி வழங்கிட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாட் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

3. ரோஸ்டர் முறையினால் மீண்டும் முஸ்லிம்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. குறைவான காலியிடங்கள் இருக்கும் பணிகளால் ரோஸ்டரின் சுற்றில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கிடைக்க சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் மாவட்ட ரீதியாக காலியிடங்களை நிரப்புவதிலும் முஸ்லிம்கள் மீண்டும் பல ஆண்டுகள், காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து அரசு அலுவலகங்களிலும் 69% இடஒதுக்கீட்டின்படி எந்தெந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதோ, அந்த சமூகங்களை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு புதிதாக பணியில் அமர்த்தும் போது முன்னுரிமை கொடுக்க வேண்டும். அனைத்து அரசுப் பணிகளிலும் அனைத்து சமூகத்திற்கும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வரை ரோஸ்டர் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் உரிய பிரதிநிதித்துவத்தை பாதிக்காத வகையில் ரோஸ்டர் முறை குறித்து குறுகிய காலத்திற்குள் நிபுணர் குழு ஆய்வு நடத்தி, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தொடர்ந்திட வழிவகை செய்திட வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

4. உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும். 24.3% மக்கள் தொகையுடைய தலித் மற்றும் பழங்குடியினர் சமூகத்திற்கு விகிதாச்சார இடஒதுக்கீட்டின் படி 22.5% இடஒதுக்கீடு வழங்கும் போது, 52% மக்கள் தொகையுடைய பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை, உச்ச நீதிமன்ற ஆணை தடுப்பது பாரபட்சமாகும். நாட்டில் 84.8% இடஒதுக்கீடு வழங்கியே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது மொத்த இடஒதுக்கீடு 50% தாண்டக்கூடாது என்று உத்தரவிடுவது சமூக நீதிக்கும் சமநீதிக்கும் உகர்ந்தது அல்ல. எனவே உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கான 50% தடையை மறு ஆய்வு செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்படும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் சட்ட இயற்றி சமூக நீதிக்கொள்கையை பாதுகாத்திட வழிவகை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

5. வேறு மதங்களலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுபவர்கள் ஏற்கனவே அனுபவித்த இடஒதுக்கீடு சலுகைகள் பறிக்கப்படுகிறது. ஒரு மதத்திலிருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுவதால் அவரது மத நம்பிக்கைதான் மாறுகிறதே தவிற அவரது கல்வி மற்றும் சமூக சூழ்நிலைகள் மாறுவதில்லை. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறும் அரசு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகையை மட்டும் பறிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே மதம் மாறுபவர்களின் சமூக மற்றும் கல்வியின் முன்னேற்றம் கருதி ஒருவர் மதம் மாறுவதால் அவர் பெற்று வந்த சலுகைகளை பறிக்காமல் அரசு தொடர்ந்து வழங்கிட வேண்டூம் என மத்திய அரசு மற்றும் தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

6. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது






 

 

 

 

 



 


 

 

 

 

 

 


 

 

 

 

 மாநில செயலாளர் பைசல் அஹ்மத் உரையாற்றிய பொழுது 

 

நாகர்கோவில் கலாசார பள்ளியின்  தலைமை இமாம் சவுக்கத் அலி  உரையாற்றிய பொழுது     

 

SDPI மாவட்ட துணை தலைவர் அம்பை ஷேக் தாவுது உரை ஆற்றுகிறார்

 

மாநில துணை தலைவரும் ,விடியல் வெள்ளி பத்திரிக்கை ஆசிரியரும் முஹம்மத் இஸ்மாயில் உரையாற்றிய பொழுது 

 


 

நாகர்கோவில் மாவட்ட தலைவர் ஜுல்பிகர் அலி தீர்மானம் வாசித்த பொழுது 

 

மேற்கு மாவட்ட  தலைவர்   லுக்மான் நன்ரயுரை ஆற்றியபொழுது 

 

...
ஈரான் ஏகாதிப(ய்)த்தியத்தின் அடுத்த குறி! 21-பிப்ரவரி-2012

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று பக்கங்களை புரட்டி பார்த்தால் அவர்களுடைய கடந்த கால நண்பர்கள் எல்லாம் நிகழ்கால எதிரிகளாக மாறிவருகின்றனர். முன்பு சோவியத் ரஷ்யாவிற்கு எதிராக போராடிய ஆப்கன் போராளிகளை விடுதலை வீரர்களாக ஒட்டுமொத்த அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் அதன் ஊடகங்களும் கொண்டாடின. இறுதியில் என்னவாயிற்று இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தையும் அதனை செய்தவர் ஓசாமா பின்லேடன்!!! என்றும் அவர் ஆப்கனில் இருக்கின்றார் என்கின்ற காரணத்தை காட்டி ஆப்கனில் தாலிபான் போராளிகளுடைய இஸ்லாமிய ஆட்சியை துடைத்தெறியும் நோக்கில் போரை தொடுத்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முடிவு தெரியாமல் திணறி சமாதõனக் கொடியை தூக்கியுள்ளது நாம் அறிந்ததே!

இரண்டாவதாக ஈராக்; ஈராக்கும் முன்பு அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்த நாடே, பின்பு மத்திய கிழக்கில் சதாமுடைய வளர்ச்சியை கண்டு அஞ்சியும் எண்ணெய்க்காகவும் அங்கு அணுஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது என்ற காரணத்தைக் கூறி ஈராக்கை துவம்சம் நடத்தி முடித்துள்ளது! (பார்க்க விடியல் வெள்ளி ஜனவரி 2012)

மூன்றாவதாக ஈரான்; ஈரானும் முன்பு ஒரு காலத்தில் மன்னராட்சியின் போது அமெரிக்க கூட்டாளியே பின்பு இஸ்லாமிய புரட்சிக்குப் பின் எல்லாம் தலை கீழாக மாறி ஈரான்  அமெரிக்க உறவில் விரிசல் விழுந்தது. புரட்சிக்கு பின்பாக ஏற்பட்ட இந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து மிகப்பெரிய ஒரு போர் சூழலை இன்று மத்திய கிழக்கில் உருவாக்கியுள்ளது.

இரண்டு போர்களினாலும் ஏற்பட்ட வீழ்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் அமெரிக்கா இன்று மத்திய கிழக்கில் தனது கள்ளக்குழந்தை இஸ்ரேலின் இருப்பை உறுதி செய்வதற்காக மூன்றாம் போருக்கு தயாராகி வருகின்றது. ஏனென்றால் சமீபகாலமாக மத்திய கிழக்கின் அரசியல் மாற்றங்கள், புரட்சியின் மூலமாக இஸ்லாமியவாதிகள் ஆட்சியில் அமருவதால் இஸ்ரேல் தனது இருப்பை குறித்து கவலை கொண்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் அண்டை நாடான இஸ்ரேல் மற்றும் ஏகாதிபத்தியத்தின் பரமவைரியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் பிரிவான ஃபிரிடம் மற்றும் ஜஸ்டிஸ் பார்ட்டி (ஊஒக) ஆட்சியைப் பிடிக்க இருக்கின்றது. ஆக ஒட்டுமொத்தமாக இஸ்ரேல் தனது எதிர்ப்பாளர்களால் சூழப்பட்டுள்ள தருவாயில் இஸ்ரேலின் நலனிற்காக ஈரான் பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கின்றது என்ற வழமையான பொய் காரணத்தை கூறி ஈரான் மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமாகி வருகின்றது.

அமெரிக்கா  ஈரான் சமீபத்திய நிகழ்வுகள்

பத்திரிகை அறிக்கை மோதல்கள், வளைகுடா பகுதிகளில் மாறி மாறி இராணுவ சக்தியை நிரூபிக்கும் வகையில் ஒத்திகை என இருந்து வந்த அமெரிக்கா ஈரான் மோதல் கடந்த வருடம் இறுதியில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஈரானால் சிறைபிடிக்கப்பட்டதிலிருந்து சூடுபிடிக்கத் தொடங்கியது. அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று ஈரான் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்திய ஈரான் அதனை சிறைபிடித்தது. முதலில் ஆளில்லா உளவு விமானம் குறித்து மௌனம் சாதித்த அமெரிக்கா பின்பு அதனை திருப்பித் தரும்படி ஈரானிடம் மன்றாடியது.

ஆனால் ஈரான் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்காமல் உளவு விமானத்தின் தொழில்நுட்பம் குறித்து ஆராயத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் வளைகுடா நாட்டில் உள்ள தனது இராணுவ தளங்களுக்கு போர்கப்பலை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்தபொழுது தங்களுடைய பிராந்தியத்தில் போர்கப்பல்கள் வந்தால் தாக்குவோம் என்று அமெரிக்காவை எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் வளைகுடா கடல் பகுதியில் தனது கடற்படை ஒத்திகையையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தது ஈரான்.

ஒரு புறம் பொருளாதார தடை, மறுபுறம் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதலை நிறுத்தி வைக்க ஐரோப்பிய யூனியனில் முடிவு என நெருக்கடி கொடுத்து ஈரானை பணிய வைக்க நினைத்த அமெரிக்காவிற்கு அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்காவின் இந்த முடிவிற்கு பதிலளித்த ஈரான் அவ்வாறு பெட்ரோலிய பொருட்கள் கொள்முதலை தடை செய்தால் வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணைய் ஏற்றுமதி செய்யப்படும் ஹெர்மூஸ் கடல்வழியை மூடுவோம் என ஈரான் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.

இப்படிப்பட்ட பதட்டமான சூழ்நிலையில் தான் ஈரானின் நதான்ஸ் பகதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த விஞ்ஞானி முஸ்தபா அஹ்மது ரோஷன் மர்மமான முறையில் கார் வெடிகுண்டு வெடித்ததில் படுகொலை செய்யப்பட்டார்.

ரோஷன் பயணித்த காரில் மேக்னடிக் வெடிகுண்டு பொருத்தப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. ரோஷன் ஈரானின் பிரபல ஷரிஃப் பல்கலைகழகத்தில் ரசாயன பொறியியலில் பட்டம் பெற்றவர் ஈரான் தனது அணுஉலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைக் கொண்டு பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் மூலம் சுத்திகரிக்கின்றது. இந்த தொழில் நுட்பத்துக்கு தேவையான பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தவர் ரோஷன் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 29 அன்று ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய தலைவர் பிரேயதோன் அப்பாசி மற்றும் பேராசிரியர் மாஜித் ஷஹ்ரியாரி ஆகியோர் இதே போன்று குண்டு வீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்காகினர். அதில் ஷஹ்ரியாரி கொல்லப்பட்டார். அப்பாஸியும் அவரது மனைவியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் இஸ்ரேலின் மொஸாத், அமெரிக்காவின் சி.. மற்றும் பிரிட்டிஷின் எம்16 ஆகிய உளவு அமைப்புகள் என டிசம்பர் 2,2010ல் ஈரானிய உளவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டது.

தற்போது நிகழ்ந்த ரோஷனின் மரணத்தின் பின்னனியிலும் சி.. இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இதே போன்றே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெஹ்ரான் பல்கலைகழகத்தின் பேராசிரியர் மஸீத் அலி முஹம்மது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

ஆக பொருளாதார தடைகளுக்கெல்லாம் அடிபணியாத ஈரானை அதன் விஞ்ஞானிகளை கொன்று அணு தயாரிப்பில் முட்டுகட்டை ஏற்படுத்தலாம் என்பதே ஏகாதிபத்தியவாதிகளின் எண்ணம் ஆகும்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்!

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்குவதற்கு முயற்சியை இஸ்ரேல் துவக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் ஈரானை தாக்க இருப்பதை முன்னிட்டு வளைகுடா பகுதியில் உள்ள தனது ராணுவ தளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இச்செய்தியை வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

திமோன்னாவில் உள்ள தனது அணுசக்தி நிலையத்தை இம்மாதம் இஸ்ரேல் மூடியது தாக்குதலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. ஈராக் உள்ளிட்ட  ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் ராணுவ தளங்கள் மற்றும் மையங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

கத்தாரில் உள்ள ராணுவ தளம், பாரசீக வளைகுடாவில் உள்ள விமானம் தாங்கி கப்பல்கள் ஆகியன ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் உள்ளது. தாக்குதல் துவங்கினால் அமெரிக்காவின் ராணுவ தளங்களை அழிக்காமல் விடமாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தினால் நடக்கும் எதிர்விளைவுகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பாதுõப்பு செயலர் லியோன் பனேட்டாவும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கூடுதல் தடைகளை விதித்து ஈரானுக்கு நிர்பந்தம் அளிப்பதன் மூலம் ஈரானை அடிபணிய வைக்க முடியும் என அமெரிக்கா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. இவ்விவகாரத்தின் தீவிரத்தை குறித்து உணர்த்த ஒபாமா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதயான்குவுடன் தொலைபேசியில் உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் தடைகள் மூலம் ஈரானை கட்டுபடுத்தலாம் என கூறும் அமெரிக்கா மறுபுறம் மறைமுகமாக தாக்குதல்களுக்கு தயாராகி வருகின்றது. ஈராக்கில் இருந்து அமெரிக்க படையினர் முற்றிலும் வாபஸ் பெற்றதாக அமெரிக்கா கூறியபோதிலும் 8 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் போருக்கான தயாரிப்புகளுடன் வடக்கு ஈராக்கில் உள்ள குர்கிஸ்தான் பகுதியில் முகாமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 14 போர் விமானங்கள், 125 ஹெலிகாப்டர்கள், 28 ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) ஆகியவைகள் தற்பொழுது ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்துடன் இருப்பதாக பிரஸ் டி.வி. அறிவித்துள்ளது.

இவையல்லாமல் குவைத்தில் ஈராக்கில் இருந்து வாபஸ் பெறப்பட்ட ராணுவ வீரர்களையும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். தற்பொழுது மொத்தமாக வளைகுடாவில் மட்டும் 40 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர். ஈராக்கில் அவசர சூழல் ஏற்பட்டால் உபயோகிப்பதற்காக குவைத்தில் ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக முன்னர் அமெரிக்கா கூறியது. ஆனால், இப்படைகுவிப்பு ஈரானுக்கு எதிராக சூழ்ந்திருக்கும் போர் மேகத்தை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கடந்த சில காலமாக அரபி கடலில் நிற்கும் யு.எஸ்.எஸ். ஜான் சிஸ்டெனிஸ் விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் யு.எஸ்.எஸ். கார்ல் வின்ஸன் கப்பலும் இணைந்துள்ளது. மூன்றாவது போர்க்கப்பலும் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்பொழுது அமெரிக்கா மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகி வருவதை நம்மால் உணர முடிகின்றது. ஆனால் இந்த ஈரானிய யுத்தம் துவங்கினால் அது மூன்றாம் உலக யுத்தகமாக மாற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையளர்கள் கருதுகின்றனர். ஈரானை அமெரிக்கா தாக்கினால் நாங்கள் ஈரானுக்கு பக்கபலமாக இருப்போம் என சீனாவும் துருக்கியும் அறிவித்துள்ளது. அதே போன்று ஈரானை தாக்கும் எண்ணத்தை ரஷ்யாவும் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இந்நிலையில் ஈரான் அதிபர் அஹ்மது நஜாதியின் சமீபத்திய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எப்படியோ மீண்டும் மத்திய கிழக்கில் போர் என்று ஒன்று நடக்குமானால் அதில் பாதிக்கப்போவது முஸ்லிம்களே எனவே முன்னாள் நண்பர்களை பகைவர்களாக மாற்றி வரும் அமெரிக்காவின் விஷமத்தனத்தை இனியாவது அரபுலக அமெரிக்க அடிவருடிகளும் அதன் ஆட்சியாளர்களும் உணர்ந்து கொள்வார்களா என்கின்ற மில்லியன் டாலர் கேள்விக்கு காலம் தான் பதில் கூற வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்!

இஸ்லாமியவாதிகள் ஏன் வெற்றிபெறுகிறார்கள்? 21-பிப்ரவரி-2012

பொதுவாக உலகளாவிய அளவிலும், குறிப்பாக அரபுலகிலும் ஊடகங்களில் விவாதத்திற்குரிய கருப்பொருளாக மாறியுள்ள தலைப்பு தான் இக்கட்டுரைக்கும் தலைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அரபு வசந்தம் பூத்துக்குலுங்கிய நாடுகளில் ஜனநாயக முறையில் நடந்த தேர்தல்களில்இஸ்லாமிஸ்டுகள்என மதசார்பற்றவாதிகளால் அழைக்கப்படும் இஸ்லாத்தை லட்சியமாக கொண்டுள்ள அரசியல் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்களின் கற்பனையில் உதித்து பரப்புரைச் செய்யப்பட்ட இஸ்லாமிக் மிலிட்டன்ஸிக்கு (இஸ்லாமிய தீவிரவாதம்) பதிலாக மக்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இஸ்லாமியவாதிகளை தேர்ந்தெடுத்ததுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும். இந்த நாடுகளில் எல்லாம் இஸ்லாமியவாதிகள் ஆட்சியை கைப்பற்றியது துப்பாக்கி முனையிலோ அல்லது தங்களது பலத்தை பிரயோகித்தோ அல்ல. மாறாக வாக்குச்சீட்டு மூலமாகும்.

துனீசியாவிலும், எகிப்திலும், லிபியாவிலும் வீதிகளில் இஸ்லாமியவாதிகள் வரவேற்கப்படுவதும், அவர்கள் கௌரவிக்கப்படுவதற்கும் காரணம் வேறொன்றும் அல்ல; இஸ்லாமிய கட்சிகள் ஆட்சியை பிடித்தால் ஜனநாயகம் வீழ்த்தப்படும் என இவ்வளவு காலமும் பறை அறிவித்து அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தியவர்களுக்கு அதே ஜனநாயக முறையை பயன்படுத்தி சரியான பதிலடியை கொடுத்துள்ளார்கள் இஸ்லாமிய கட்சியினர். கிடைத்த முதல் வாய்ப்பையே நாட்டின் புனர்நிர்மாணத்திற்கு இஸ்லாமிய கட்சிகள் பயன்படுத்துவார்களானால் ஒரு காலத்திலும் தேசிய நீரோட்டத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த உலகில் எந்த சக்தியாலும் முடியாது. அதற்கு மாற்றமாக நடந்தால் எந்த வாக்குச்சீட்டு மூலமாக ஆட்சியில் மக்கள் இஸ்லாமிய கட்சிகளை அமர்த்தினார்களோ அதே வாக்குச்சீட்டு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றவும் செய்வார்கள். அரபு சமூகம் கனவு காணும் அனைவருக்கும் நீதி கிடைக்கும் ஒரு ஆட்சி முறையை உருவாக்குவதுதான் இஸ்லாமிய கட்சிகளின் முன்னால் உள்ள முக்கிய பணியாகும்.

பல வருடங்களாக ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் சுயமாக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலம் ஆளப்பட்ட அரபு நாடுகள் எல்லாம் அவை சுதந்திரமாக இருந்த காலக்கட்டங்களில் உலகிற்கு விலைமதிப்பற்ற பல்வேறு நன்கொடைகளை அளித்த இஸ்லாத்தின் மையங்களாக செயல்பட்டன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

எகிப்து ஒரு காலத்தில் அரபு இஸ்லாமிய கலாச்சாரத்தின் மையமாக திகழ்ந்தது. பிற்காலத்தில் அதிகாரத்தை கைப்பற்றிய ஏகாதிபத்தியவாதிகள் சொந்த நாட்டு குடிமக்களை இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக கொண்டார்கள் என்ற காரணத்திற்காக சிறையில் அடைத்தனர். அத்தோடு அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு கொலையும் செய்தனர்.

தொன்னூறுகளின் இறுதியில் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் கிங் சவூத் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய ஒரு எகிப்திய பேராசிரியர் அரபு கலாச்சாரத்தை குறித்து உரை நிகழ்த்தும் வேளையில், தனது சொந்த நாட்டைக்குறித்து அவர் கூறும்பொழுதுசெய்யத் குதுபும், ஹஸனுல் பன்னாவும் போன்ற தீரர்களை இழந்தது தான் எகிப்தின் சாபம்எனக்குறிப்பிட்டார்.

இது வெறும் ஒரு தனிநபரின் உணர்வு அல்ல. மாறாக ஒரு சமூகத்தின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த வேதனையாகும். அந்த வேதனையைத்தான் அவர்கள் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே பயன்படுத்தி அரபுலக மக்கள் இஸ்லாமியவாதிகளை வெற்றி பெறவைத்துள்ளார்கள்.

ஏகாதிபத்திய நாடுகள் உளமாற ஆதரவும் உதவியும் அளித்தபோதிலும் அரபு சோசியலிஸ்டு கட்சிகள் அஸ்தமனத்தின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அரபு தேசியத்தின் பெயரால் வளர்ந்த கட்சிகளும், அரபு பாத் கட்சியினரும், அரபு தாராளமய வாதிகளும் எல்லாம் அரபுலகின் நினைவுச்சின்னங்களாக மாற அதிகநாள் தேவைப்படாது. ஒரு போதும் கேள்வி கேட்க்கப்படாமல் ஆதிக்கம் செலுத்திய இவர்களின் பெயர்களை கூட உச்சரிக்க அரபு நாடுகளில் ஆட்கள் இல்லை. அதற்கு பதிலாக அனைத்து ஊடக அவதூறுச் செய்திகளையும், பொய்ப்பிரச்சாரங்களையும், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளையும் எதிர்கொண்டு இஸ்லாமிய கட்சிகள் தேர்தல்களில் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

வருடக்கணக்கில் நீடித்த சித்திரவதைகளாலும், அடக்கு முறைகளாலும், தடைகளாலும் இஸ்லாமிய இயக்கங்களை அழிக்கவோ, அதன் உறுப்பினர்களின் உணர்வுகளை உருக்குலைக்கவோ மக்கள் மனங்களில் அவர்களின் செல்வாக்கை குறைக்கவோ சர்வாதிகார ஆட்சியாளர்களால் இயலவில்லை. அரசியல் பாடத்தை கற்கும் மாணவர்கள் இதனை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அரபு நாடுகளில் சுதந்திரத்தின் காற்று வீசத்துவங்கியது முதலே இஸ்லாமிய கட்சிகள் முன்னேறுவதை கண்ணுற்றோம்.

புரட்சிக்கு பிந்தைய துனீசியாவில் இஸ்லாமியவாதிகள் முதன் முதலாக ஆட்சியை பிடித்தனர். தொடர்ந்து புதிய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த மொரோக்கோவிலும்,ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சிக்குப் பிறகு எகிப்தில் நடந்த தேர்தலிலும், இஸ்லாமியவாதிகள் முன்னேறிய வேளையில், லிபியாவில் முஅம்மர் கத்தாஃபிக்கு பிறகு புதிய மாற்றங்களுக்கு தலைமை வகிப்பதும் இஸ்லாமியவாதிகள் ஆவர்.

ஏன் அரபு சமூகம் இஸ்லாமியவாதிகளை தங்களுக்கு விடுதலையை பெற்றுத்தரும் பிரதிநிதிகளாக கருதுகின்றனர்? என்ற கேள்வி நியாயமானதே! உலக ஊடகங்களில் இதுகுறித்த விவாதங்கள் இன்று சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இஸ்லாம் வெறும் ஆன்மீக தியான வணக்கவழிபாடுகளுடன் ஒதுங்கும் மார்க்கம் அல்ல, அது மனிதனின் சிந்தனையையும், கலாச்சாரத்தையும் வார்த்தெடுக்கும் முக்கிய காரணியாகும். மனிதனின் ஆன்மீக, சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார துறைகளை சூழ்ந்து நிற்கும் உயிர் துடிப்பான ஒரு சிறப்புமிக்க தத்துவம் இஸ்லாம் என்பதை அரபுலக மக்கள் உணர்ந்தார்கள்.

ஆகையால்தான் மனிதர்களில் இருந்து அகன்று இருக்கும் சர்வாதிகாரிகளையும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வெறும் உலக ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட தத்துவங்களையும் புறக்கணித்துவிட்டு தங்கள் வாழ்க்கையின் முழுமையான வெற்றிக்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமியவாதிகளும் காரணமாக முடியும் என்பதை அரபு சமூகம் அடையாளம் கண்டு கொண்டது.

உண்மையான இஸ்லாமிய சட்டதிட்டங்களும், ஆட்சிமுறையும் தீவிரவாதம் அல்ல என்பதையும், மாறாக மனித நேயத்தின் அடிப்படையிலானது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். இஸ்லாமும், ஜனநாயக முறையும் கைகோர்த்து நடக்கும் துருக்கியின் பரிசோதனை அவர்களை சிந்திக்க வைத்துள்ளது. அரபு வசந்தத்தையும், தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள் தலைமையிலான ஆட்சியையும் பொதுவாக உலகமும், குறிப்பாக அரபுலகமும் சுபச் செய்தியாகவே காண்கின்றன.

அரபு வசந்தம் அல்ல! இஸ்லாமிய வசந்தம்!

எகிப்தில் நடந்த புரட்சியின் துவக்க நாட்களில் ராணுவம் பின்வாங்கியதால் பாதுகாப்பு முறைகள் சீர்குலைந்தன. சிறைச்சாலைகளின் வாசல்கள் திறக்கப்பட்டு கைதிகள் தப்பிச் சென்றனர். ஆனால், புரட்சி துவங்கிய நாட்களில் சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமியவாதிகள் மட்டும் சிறையை விட்டு வெளியேறõமல் இருந்ததை கண்ட அல்ஜஸீராவின் செய்தியாளர்ஏன் சிறையை விட்டு நீங்கள் வெளியேறவில்லை? என கேள்வி எழுப்பியபொழுது நாட்டின் சட்டத்தை மீற எங்களுக்கு விருப்பமில்லைஎன இஸ்லாமியவாதிகள் பதிலளித்தனர்.

சிறையில் இருந்த அனைத்து கைதிகளும் தப்பிச் சென்றபிறகு, நாட்டின் சட்ட கட்டமைப்பு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்பதை உறுதி செய்த பின்னர்தாம் இஸ்லாமியவாதிகள் சிறையில் இருந்து வெளிவந்தனர் என்பதை அல்ஜஸீரா ஆச்சரியத்துடன் உலகிற்கு எடுத்தியம்பியது. இஸ்லாத்திற்கு முரணõ இருந்தபோதிலும் நாட்டில் அமுலில் இருந்த சட்டத்தை இவ்வளவு தூரம் அங்கீகரித்த குழுவினரையா எகிப்தை ஆண்ட சர்வாதிகாரிகள் தேசத்துரோகிகள் என அழைத்து இவ்வளவு காலமும் தேசிய நீரோட்டத்திலிருந்து அகற்றினர்? என்பதை நாம் நினைவுகூற வேண்டும்.

அரபு நாடுகளில் முதன்முதலாக நடைபெற்ற ஜனநாயகரீதியிலான தேர்தலுக்கு பிறகு அரபு வசந்தத்தைக்குறித்து ஒரு அரபு பத்திரிகையாளர் கூறியது என்னவெனில், ‘இது அரபு வசந்தம் அல்ல! மாறாக இஸ்லாமிய வசந்தமாகும்! ஆம்! இஸ்லாமியவாதிகள் வரலாற்றில் முதன்முறையாக மக்களோடு நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். அரபு நாடுகளில் இஸ்லாமிய இயக்கங்கள் முன்னேற்றத்தின் பாதையில் இருந்தாலும் அவர்களுக்கு முன்னால் ஏராளமான நெருக்கடிகள் காத்து இருக்கின்றன என்பது உண்மையாகும். அதிகாரிகளின் பலப்பிரயோகம் இல்லாமல், ஏகாதிபத்திய சட்டத்திட்டங்களின் எல்லைகள் இல்லாமல் மக்களை நேரடியாக சந்திக்க கிடைத்த வாய்ப்பை அவர்கள் எவ்வாறு உபயோகப்படுத்த போகிறார்கள் என்பது முக்கியமாகும்.

இஸ்லாமிய வாதிகளை பழைய அளவு கோல்களை பயன்படுத்தி அளப்பது சாத்தியமல்ல. இஸ்லாமிய இயக்கங்கள் இயங்கிக்கொண்டிருந்த சுற்றுச்சூழல்கள் முற்றிலும் மாறியுள்ளன. இம்மாற்றத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயல்முறைகளை வகுத்து செயல்பட வேண்டும். ராணுவத்தின் அடக்குமுறைகள், ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்ககள் காரணமாக பொது சமூகத்தில் உருவான மோசமõ நம்பிக்கைகளை எல்லாம் இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதித்துவத்தை பெருமளவில் பாதித்திருந்தது. இன்று அவையெல்லாம் துடைத்தெறியப்பட்டுள்ளன.

ஆதலால், மக்களை நெருங்குவதற்கான புதிய அணுகுமுறைகளையும், வெகுஜன தொடர்பு குறித்த ஃபிக்ஹ்களையும் (மார்க்க சட்டங்கள்) இஜ்திஹாத் (ஆய்வு) செய்து தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நவீனகால வரலாற்றில் ஒரு வேளை முன்பு எப்பொழுதும் இல்லாத சூழல்களை இஸ்லாமியவாதிகள் சந்திக்க வேண்டிவரும். ஏதேனும் வகையிலான புரட்சிகள் மூலம் அல்ல. மாறாக, மக்கள் ஆதரவுடன் ஆட்சியை பிடித்த இஸ்லாமிய கட்சிகளுக்கு நாட்டின் மக்களுடைய விருப்பங்களை பாதுகாக்கும் ரீதியிலான இஸ்லாமிய சூழல்களை உருவாக்க வேண்டும்.

அரபுலகில் மீண்டு வந்துள்ள இஸ்லாமிய இயக்கங்கள் சிந்தனை ரீதியாகவும், செயல்ரீதியாகவும் இஸ்லாத்தின் சிந்தனைகளை தற்கால அரசியல் சூழல்களுடன் இணைப்பதில் ஏற்படும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. துனிசீயாவில் அந்நஹ்ழாவின் தேர்தல் வெற்றிக்குப்பிறகு அக்கட்சியின் தலைவர் ராஷித் அல் கன்னோஸி நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியது என்னவெனில்; நாட்டில் சமூக, கலாச்சார, அரசியல் சூழல்களை மதிப்பீடு செய்து அதற்கு ஒத்த செயல்களத்தை உருவாக்க இஸ்லாமிய கட்சிக்கு முடிந்தவரை சாத்தியமாகும் என்பதாகும். இறுதியாக, இஸ்லாமிய கட்சிகள் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள நாடுகளில் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மாற்றி அமைப்பதில் எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் அவர்களது வெற்றி அமைந்துள்ளது. அரபு நாடுகள் எதிர்கொள்ளும் சமூக, அரசியல் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இஸ்லாமியவாதிகளின் கைகளில் அலாவுதீனின் அற்புத விளக்கு ஒன்றும் இல்லை. அதேவேளையில், புதிய சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றத்தையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஊடகங்களின் துணையுடன் இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள், இஸ்லாமியவாதிகள் ஆட்சியில் அமர்ந்தால் பழையதும், மக்கள் விரோதமான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார்கள் என்றும் அது முன்னேற்றத்தை பின்னோக்கி இழுக்கும் என்றும் பரப்புரை செய்கின்றார்கள். எவ்வித மாற்றத்திற்கும் தயாராகாமல், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பயணிக்க தெரியாதவர்கள்தாம் இஸ்லாமியவாதிகள் என்பது இஸ்லாமிய விரோதிகளின் பிரச்சாரமாகும். இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் வழிமுறை எல்லா இடங்களிலும் ஒரேபோலத்தான். இஸ்லாமிய அமைப்புகள் மாற்றத்தை அங்கீகரித்தால் அது மோசடி என்றும், மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறுவார்கள். மாற்றத்தை அங்கீகரிக்காவிட்டால் தீவிரவாதிகள் என்றும், நாகரீகம் இல்லாதவர்கள் என்றும் முத்திரைகுத்துவார்கள். இஸ்லாமிய எதிரிகளின் இத்தகைய சூழ்ச்சிகளை அடையாளங்கண்டு மக்களின் பௌதீக, தார்மீக, அரசியல், கலாச்சார, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயன்றால் அரபு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் விலைமதிப்பற்ற நன்கொடைகளை இஸ்லாமிய கட்சிகளால் அளிக்க இயலும்.


இயக்க செய்திகள்

மேலும்....

pfi
vidial
ilakiyacholai
tv_adv